35 பயணிகளுடன் அரசு பேருந்தையே ஆட்டையப்போட்ட திருடன் - கடைசியில் டுவிஸ்ட்!
வாலிபர் ஒருவர் 35 பயணிகளுடன் அரசு பேருந்தை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஸ் திருடன்
தெலங்கானா மாநிலம், சித்திபேட்டை பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து பயணிகளுடன் நின்றுகொண்டிருந்தது. அப்பொழுது பஸ்ஸில் ஏறிய ஒரு இளைஞர் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் நீங்கள் என்று கேட்டு பணத்தை வாங்கிக்கொண்டார்.
அதற்கான டிக்கெட்டை கண்டக்டர் வந்து கொடுப்பார் என்று கூறி பேருந்தை ஓட்டி சென்றார். கண்டக்டரும் இல்லாமல் சுமார் 50 கி.மீ வரையில் ஓட்டி சென்றார், அதன்பிறகு பேருந்து டீசல் இல்லாமல் பாதியில் நின்றுவிட்டது.
பயணிகள் பதற்றம்
இந்நிலையில், அந்த நபர் மீது சந்தேகம் அடைந்த பயணிகள் நீ உண்மையிலேயே அரசு பேருந்து ஓட்டுனரா என்று கேள்வி கேட்டனர். அப்பொழுது மாட்டிக்கொண்ட அந்த திருடன் நான் பேருந்து ஓட்டுநர் கிடையாது, இந்த பேருந்தை திருடி காயலாங்கடையில் போட நினைத்தேன் என்று கூறினார்.
இதனை கேட்ட பயணிகள் அவரை வீடியோ எடுத்துவைத்தனர், பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதனப்பிறகு போலீஸ் விரைந்து வருவதற்குள் இந்த திருடன் மாயமானார். அதே நேரத்தில் பேருந்தை காணவில்லை என்று அந்த பேருந்தின் உண்மையான ஓட்டுனர் சாமி சித்தி பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் தேலராஜூ என்ற திருடனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.