சுதந்திரத்தை தேடி... 10 மணிநேரம் கடலில் நீந்தியே சென்ற நபர் - குளவியால் வந்த வினை!

China Taiwan Migrants
By Vinothini Jul 29, 2023 10:50 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

கடலில் 10 மணிநேரம் நீந்தியே சென்ற நபருக்கு ஒரு குளவியால் நேர்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீச்சல் பயணம்

சீனாவின் புஜியான் மாகாணத்தில் 40 வயது சீனர் ஒருவர், 4 நாட்களுக்கு முன்பு தைவானின் மட்சு தீவுகளுக்கு கிட்டத்தட்ட 10 மணிநேரம் நீந்தி சென்று புகலிடம் அடைந்துள்ளார். இந்த பிரயாணத்திற்காக அவர் உணவு, ஆடை, மருந்து மற்றும் சீன கரன்சி ஆகியவற்றை எடுத்து சென்றுள்ளார்.

man-swims-10-hours-to-reach-taiwan-island

இவரை தைவானில் இரண்டாவது பெரிய தீவான பெய்கன் தீவில் உள்ள பெய்கன் டவுன்ஷிப் பகுதிக்கு சென்று அடைந்தார். இவர் நீந்தியே அப்பகுதிக்கு சென்றுள்ளார், அவர் அங்கேயே அரசுக்கு தெரியாமல் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவருக்கு குளவி கொட்டியது, இதனால் மருத்துவ உதவி தேவைப்பட்டது.

அரசிடம் சிக்கிய நபர்

இந்நிலையில், மட்சு தீவுகளில் உள்ள சுற்றுலா பயணிகளிடம் உதவி கேட்டார், அப்பொழுது அவர்கள் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவரிடம் விசாரித்தபொழுது தைவானின் மட்சு தீவுகளுக்கு "சுதந்திரத்தை தேடி" நீந்தி வந்ததாக அதிகாரிகளிடம் கூறினார்.

man-swims-10-hours-to-reach-taiwan-island

ஹுவாங்கி தீபகற்பத்திற்கும் பெய்கன் தீவிற்கும் இடையிலான தூரம் சுமார் 12 கி.மீ. சீனாவின் கடற்கரை பகுதியிலிருந்து தைவான் 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தொடர்ந்து, இவர் சட்டவிரோதமாக குடியேறியது தெரியவந்தது.

இவரை அதிகாரிகள் பெய்கனில் உள்ள சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், தைவான் பகுதிக்கும், மெயின்லேண்ட் பகுதிக்கும் இடையேயான சட்டத்தின்படி விசாரணைக்காக லியன்சியாங் மாவட்ட அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.