5 ஸ்டார் ஹோட்டலில் 2 வருடம் சொகுசாக தங்கிய நபர் - கடைசியில் நிர்வாகத்திற்கு வைத்த ஆப்பு!

Delhi Crime
By Vinothini Jun 22, 2023 06:59 AM GMT
Report

சொகுசு ஹோட்டலில் 2 வருடம் தங்கி கடைசியில் நிர்வாகத்தை ஏமாற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹோட்டல்

டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ‘ரோஸேட் ஹவுஸ்’ என்ற 5 ஸ்டார் ஹோட்டல் உள்ளது. அங்கு அங்குஷ் தத்தா என்பவர் 603 நாட்கள் தங்கியுள்ளார். இவர் ஒரு பைசா கூட கொடுக்காமல் சென்றுவிட்டதாகவும் இதனால் ரூ.58 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ள தாகவும் இந்த ஹோட்டல் நிர்வாகம் போலீசில் புகாரளித்துள்ளது.

man-stayed-in-5star-hotel-without-paying

இந்த ஹோட்டலில் ரூம் கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரம் வரவேற்பரையின் தலைமை ஊழியர் பிரேம் பிரகாஷுக்கு தரப்பட்டிருந்தது. அவர்தான் அந்த நபரின் நிலுவை தொகையை கண்காணித்து வருவார்.

ஆனால் அங்குஷ் தத்தா கடந்த 2019, மே 30-ம் தேதி ஓட்டலில் ஓர் இரவுக்கு மட்டும் அறை எடுத்துள்ளார். ஆனால் அவர் காலி செய்யாமல் பனமும் செலுத்தாமல் 2021, ஜனவரி 22-ம் தேதி வரை தங்கியுள்ளார். இதனை அந்த ஊழியரும் நிருவாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரவில்லை.

மோசடி

இதனை தொடர்ந்து, அங்குஷ் தத்தா ரூ.10 லட்சம், ரூ.7 லட்சம் மற்றும்ரூ.20 லட்சம் என வெவ்வேறு தேதிகளில் காசோலை கொடுத்துள்ளார். ஆனால் அவை அனைத்தும் அவரது வாங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது.

man-stayed-in-5star-hotel-without-paying

இதனை அந்த ஊழியரும் நிருவாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வில்லை. மேலும், அவர் அந்த நபர் குறித்து கணினியில் பல முறைகேடுகள் செய்து அவரை தங்கவைத்துள்ளார். அதனால் அந்த ஊழியர் இருந்து பணம் பெற்றிருக்கலாம் என ஓட்டலின் மற்ற சில ஊழியர்களும் இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்திருக்கலாம் எனவும் நிர்வாகம் சந்தேகிக்கிறது.

இது தொடர்பாக விமான நிலைய போலீசார் முதல்கட்ட விசாரணையில் குற்றம் நடந்து இருப்பது தெரிய வந்தது. இதனால் போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கையை தொடங்கியதாக தெரியவந்துள்ளது.