திடீரென விலகிய திருமணமான ரகசிய காதலி - ஓட்டலில் காதலன் கொடூர செயல்!

Attempted Murder Karnataka Relationship Crime
By Sumathi Jun 10, 2025 04:58 AM GMT
Report

திருமணமான காதலியை, இளைஞர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விலக முயன்ற காதலி

கர்நாடகா, கெங்கேரி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிணி(33). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவருக்கும் பொறியாளர் யஷாஸ் (25) என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது.

ஹரிணி - யஷாஸ்

தொடர்ந்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று ஹரிணி பெங்களூருவில் உள்ள ஹோட்டல் அறையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

கணவன் - மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்த காதல் ஜோடி - ஒரே வாரத்தில் விபரீதம்

கணவன் - மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்த காதல் ஜோடி - ஒரே வாரத்தில் விபரீதம்

காதலன் வெறிச்செயல்

அந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஹரிணியின் காதலன் யஷாஸ் என்பவர் அவரை கொலை செய்துள்ளார்.

திடீரென விலகிய திருமணமான ரகசிய காதலி - ஓட்டலில் காதலன் கொடூர செயல்! | Man Stabs Married Woman For Affair Banglore

இருவரது உறவு ஹரிணியின் குடும்பத்தினருக்குத் தெரியவந்துள்ளது. இதனால், அந்த உறவை முறித்துக் கொள்ள ஹரிணி முடிவு செய்தார். அதன்படி, ஹோட்டல் அறையில் யஷாஸை சந்தித்து இனிமேல் இந்த உறவைத் தொடர முடியாது என ஹரிணி கூறியதாகக் கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த யஷாஸ், ஹரிணியை கத்தியால் 17 முறை குத்தி கொடூரமாகக் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து யஷாஸை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.