சூதாட்டத்தில் ஏற்பட்ட கடன் - நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்!
சூதாட்டத்துக்கு அடிமையான கணவர், மனைவியை நண்பனுக்கு விற்றுள்ளார்.
எல்லைமீறிய கணவன்
மத்திய பிரதேசம், தார் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் சூதாட்டத்துக்கு அடிமையானவர். இதனால் அவருக்கு ரூ.50 ஆயிரம் வரை கடன் ஏற்பட்டுள்ளது.
இந்த கடனை அவர் தனது நண்பர்கள் சிலரிடம் வாங்கியுள்ளார். இதனை கடன் கொடுத்தவர்கள் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் கடனை அடைப்பதற்காக நண்பர் ஒருவருக்கு, தனது மனைவியை விற்றுள்ளார்.
நண்பன் வெறிச்செயல்
தொடர்ந்து, பல முறை அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒருகட்டத்தில், அந்த பெண், அவரிடம் இருந்து தப்பி வந்துள்ளார்.
பின், இதுதொடர்பாக மகளிர் போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அந்த பெண்ணின் கணவரையும் அவரது நண்பரையும் தேடி வருகின்றனர்.