தடுப்பூசியால் மாணவி பலி? ஆயிரம் கோடி இழப்பீடு கோரும் தந்தை-நீதிமன்றம் அதிரடி!

COVID-19 Vaccine Maharashtra Bill Gates
By Sumathi Sep 03, 2022 06:46 AM GMT
Report

கொரோனா தடுப்பூசியால் மாணவி உயிரிழந்ததாக ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு கோரப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி

அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர் திலீப் லுனாவத். இவரது மகள் சினேகல் லுனாவத் தமங்கானில் உள்ள பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மூத்த விரிவுரையாளராக இருந்தார். மருத்துவக் கல்லூரியில் உள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

தடுப்பூசியால் மாணவி பலி? ஆயிரம் கோடி இழப்பீடு கோரும் தந்தை-நீதிமன்றம் அதிரடி! | Man Seeks 1000 Crore Compensation Daughter Died

அதன் பிறகு அவரது மகளும் இந்த தடுப்பூசியை எடுக்க வேண்டியதாயிற்று. ஜனவரி 28, 2021 அன்று சினேகல் தடுப்பூசியை எடுத்துக் கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு, சினேகலுக்கு தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்டது. அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மகள் உயிரிழப்பு

அப்போது அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சினேகல் மார்ச் 1, 2021 அன்று இறந்தார். தடுப்பூசியின் பக்க விளைவுதான் மரணத்திற்கு காரணம் என சினேகலின் தந்தை மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தடுப்பூசியால் மாணவி பலி? ஆயிரம் கோடி இழப்பீடு கோரும் தந்தை-நீதிமன்றம் அதிரடி! | Man Seeks 1000 Crore Compensation Daughter Died

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிடம் இருந்து ரூ.1,000 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்குப் பிறகு ஏற்படும் பாதகமான நிகழ்வுகள் குறித்த மத்திய அரசின் குழு அக்டோபர் 2, 2021 அன்று சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1000 கோடி இழப்பீடு

இந்த மனு நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா மற்றும் மாதவ் ஜம்தார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் ஆகஸ்ட் 26ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ்,

சீரம் நிறுவனம் மற்றும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும்.