74 வயது மூதாட்டியை கற்பழித்து கொன்ற இளைஞர் - கேரளாவில் பரபரப்பு..!

Attempted Murder Sexual harassment Crime
By Vinothini Jun 06, 2023 07:03 AM GMT
Report

கேரளாவில் 74 வயதான மூதாட்டியை இளைஞர் ஒருவர் கற்பழித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூதாட்டி

கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது பக்கத்து வீட்டில் 74 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார்.

man-raped-74-years-old-women

இவர் நேற்று முழுவதும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதில் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அந்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டார்கள் உடனடியாக மூதாட்டியை மருத்துவமனையில் சேர்த்தனர்.

கைது

இந்நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

man-raped-74-years-old-women

மேலும், அவர் கற்பழிக்கப்பட்டு இறந்துள்ளார் என்பது பிரேத பரிசோதனையின்போது தெரியவந்தது.

இதனை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த மூதாட்டியின் வீடு அருகே வசித்து வந்த ராஜன், அவரை கற்பழித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.