ஒரே மண்டபத்தில் 2 பெண்களை திருமணம் செய்த நபர் - காரணத்தை கேட்டால் ஷாக்!
நபர் ஒருவர் ஒரே மண்டபத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
காத்துவாக்குல 2 காதல்
தெலுங்கானா, லிங்காபூர் மண்டலத்தில் கும்னூர் கிராமத்தில் வசிக்கும் நபர் சூரியதேவ். இவர் லால் தேவி மற்றும் ஜல்காரி தேவி என்ற இருபெண்களை ஒரே நேரத்தில் காதலித்துள்ளார்.
தொடர்ந்து மூவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்கிறோம் என குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். அப்போது கிராமத்தில் உள்ள பெரியவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்துள்ளனர்.
ஒரே மேடையில் திருமணம்
பின் பேசி சம்மதிக்க வைத்துள்ளனர். தொடர்ந்து அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இரண்டு பெண்களின் பெயர்களையும் ஒரே திருமண அழைப்பிதழில் அச்சிட்டு உறவினர்களுக்கு வழங்கியுள்ளனர்.
அதன்படி ஒரே மண்டபத்தில் சூர்யதேவ் பீம், 2 பெண்களையும் திருமணம் செய்துள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், சூர்யதேவ் பீம், இரண்டு பெண்களுடன் அக்னி குண்டத்தை சுற்றி திருமணச்சடங்கில் ஈடுபடுகிறார்.