விடுமுறையுடன் ஊதியம்பெற.. ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்த வங்கி ஊழியர்!
ஊழியர் ஒருவர், ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து அதிக விடுமுறையை பெற்றுள்ளார்.
4 முறை திருமணம்
வங்கி எழுத்தர், ஒருவர் முதல் முறையாக ஏப்ரல் 6, 2020 அன்று திருமணம் செய்து கொண்டுள்ளார். பின், அந்த விடுமுறை முடிந்த பிறகு, அவர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.
தொடர்ந்து கூடுதல் விடுப்பு கோர மறுநாளே அந்த பெண்ணையே மறுமணம் செய்துகொண்டுள்ளார். இவ்வாறு அந்தப் பெண்ணை அவர் 4 முறை விவாகரத்தும் செய்துள்ளார். இதன்மூலம் 32 நாட்கள் விடுமுறையுடன் ஊதியமும் பெற்றுள்ளார்.
ஊழியரின் செயல்
இதனால் சந்தேகம் கொண்ட வங்கி, சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி, அடுத்தடுத்த திருமணங்களுக்கு விடுப்பு வழங்க மறுத்துவிட்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்து ஊழியர் தொடர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டது.
வங்கி சட்டத்தை மீறியதாகக் கூறி நிறுவனத்திற்கு தோராயமாக ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் வங்கி மேல்முறையீடு செய்தது. ஆனால் அதிலும் எழுத்தரின் நடவடிக்கைகள் நெறிமுறை ரீதியாக கேள்விக்குரியவை. ஆனால் சட்டப்பூர்வமாக அனுமதிக்கத்தக்கவை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க தைவானின் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.