மகனுக்கு பார்த்த பெண்ணிடம் நெருக்கம் - வருங்கால மருமகளை திருமணம் செய்த தந்தை
மகனுக்கு பெண் பார்க்க சென்ற இடத்தில் தந்தை திருமணம் செய்துக்கொண்டார்.
தந்தையின் செயல்
உத்தரப் பிரதேசம், ராம்பூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சகீல். இவருக்கு திருமணமாகி 6 பிள்ளைகள் உள்ளனர். இவர் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க பெண் தேடிக்கொண்டிருந்தார்.
அதன்படி, ஒரு இடத்தில் பெண் பார்த்து முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து சகீல் தனது மகனுக்கு பெண் பார்த்து முடிவு செய்த வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
மகன் ஆதங்கம்
அப்போது மகனுடன் திருமணாக இருக்கும் பெண்ணுடன் சகீலுக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது. பின் போனில் பேசுவது, வீடியோ காலில் பேசுவது என்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதுகுறித்து சகீல் மகன் பேசுகையில், எனது பாட்டி மற்றும் தாத்தாவும் எனது தந்தையின் முடிவுக்கு ஆதரவாக இருக்கின்றனர். ரூ.2 லட்சம் மற்றும் 17 கிராம் தங்கத்துடன் எனது தந்தை வீட்டை விட்டு ஓடிச்சென்று எனக்கு பார்த்த பெண்ணையே திருமணமும் செய்து கொண்டார் எனத் தெரிவித்துள்ளார்.