நான் உனக்கு வாழ்க்கை தரேன்.. பெண்களிடம் ஆசையாக பேசி 415 பவுனை ஆடையப்போட்ட காதல் மன்னன்!

Crime Puducherry
By Vinothini Oct 07, 2023 11:46 AM GMT
Report

ஒருவர் பல பெண்களிடம் ஆசை வார்த்தைகளை பேசி மயக்கி ஏமாற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் மன்னன்

புதுச்சேரி, முத்தையால் பேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது ஷபான் (வயது 36), இவருக்கு ரஹமத்துல்லா என்ற பெயரும் உண்டு, இவர் பி.சி.ஏ. பட்டதாரி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது.

man-looted-415-jewellery-by-tricking-women

இவர் சமூக வலைத்தளம் மூலம் பல பெண்களிடம் பேசி நான் தொழில் அதிபர், நகைக்கடை வைத்துள்ளேன். ஸ்டீல் கம்பெனி வைத்துள்ளேன், இளம் விதவைப்பெண்களுக்கு வாழ்வு கொடுப்பதாக சபதம் வைத்துள்ளேன் என்று கூறி பல விதவை பெண்களையும் விவாகரத்தான பெண்களையும் ஏமாற்றியுள்ளார்.

அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தனது கணவரை விவாகரத்து செய்து 2-வது திருமணத்துக்கு, நல்ல மணமகன் தேவை என்று வாட்ஸ்-அப் மூலம் தகவல் வெளியிட்டார்.

மோசடி

இந்நிலையில், அந்த தகவல் குறித்து அறிந்துகொண்ட முகமது ஷபான், அந்த பெண்ணிடம் அவரது பாணியில் பேசி காதல் வலையில் சிக்கவைத்தார். அவரை திருமணம் செய்வதாக உறுதியளித்தார். அவருடைய முதல் கணவர், செய்வினை வைத்துள்ளதாகவும், அதற்கு மசூதியில் மந்திரம் ஓதி சரி செய்துவிடலாம், மந்திரம் ஓதுவதற்கு நிறைய தங்க நகைகள், பூஜையில் வைப்பதற்கு தேவைப்படுகிறது என்று கூறி கொஞ்சம் கொஞ்சமாக அவரிடமிருந்து 415 பவுன் வரை பறித்துள்ளார்.

man-looted-415-jewellery-by-tricking-women

அதன்பிறகு, அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட பெண், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து, காதல் மன்னன், முகமது ஷபான் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். இதனை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் முகமது ஷபானை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து செல்போன்கள், லேப்டாப் மற்றும் கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. அவர் பறித்த 415 பவுன் நகைகளில் சிலவற்றை அடகு வைத்தும், இன்னும் சிலவற்றை விற்பனை செய்தும் ஜாலியாக செலவு செய்துள்ளது தெரியவந்தது.

மேலும், இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கலாம். அவரகளது பெயர், விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.