77 ஆண்டுகளாக சிலிண்டர் போன்ற இரும்பு நுரையீரலுடன் வாழும் மனிதர் - சோதனையிலும் சாதனை!

United States of America World
By Vinothini Aug 17, 2023 06:38 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

ஒருவர் இரும்பு நுரையீரலுடன் 77 ஆண்டுகளாக வாழ்ந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலியோ அட்டாக்

அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் பால் அலெக்சாண்டர் தனது 6 வயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் அவரின் கழுத்துக்கு கீழ்பகுதி முழுமையாக செயலிழந்தது. இவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

man-lived-with-iron-lungs-for-77-years

இவருக்கு மூச்சுவிடுவதற்கு கடினமாக இருந்தது, பின்னர், அங்கிருந்த ஒரு மருத்துவர் அவருக்கு ‘Tracheostomy’ என்னும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். அப்பொழுது தான் அவருக்கு சிலிண்டர் வடிவிலான இரும்பு நுரையீரல் பொருத்தப்பட்டது. இவர் 18 மாதங்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார், பின்னர் ‘frog breathing’ என்ற முறையை கையாண்டார்.

சாதித்த மனிதர்

இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு இவரது வாழ்க்கைப் பயணத்தை மிட்ச் சம்மர்ஸ் என்பவர் ஒரு சிறிய ஆவணப்படமாக தயாரித்தார். அதில் இவர், கூறுகையில், "என்னுடைய நிலையை கண்டு அனைவரும் என்னை வெறுத்தனர். என்னுடன் பேசவே தயங்கினர். நான் பள்ளி படிப்பை முடித்த பின், எனது நிலைமை கண்டு கல்லூரியில் என்னை சேர்க்கவில்லை. 2 வருடங்கள் கழித்து பல நிபந்தனைகளின் அடிப்படையில் ஒரு கல்லூரில் சேர்ந்து வழக்கறிஞராக பட்டம் பெற்றேன்.

man-lived-with-iron-lungs-for-77-years

பின்னர் சில வரலாற்று புத்தகங்களை எழுதினேன். மேலும் உங்களுடைய கடந்தகால இயலாமையை நினைத்து யாரும் வருத்தப்படாதீர்கள். ஏனேனில், அதற்கு எடுத்துக்காட்டாக நான் இருக்கிறேன்" என்றார்.

இவரது உடற்பயிற்சியாளரான சல்லிவன் ஊக்கமளித்து வருகிறார், இவர் வெண்டிலேட்டர் உதவியில்லாமல் மூன்று நிமிடங்களுக்கு தானாக சுவாசித்தால் அழகிய நாய்குட்டி ஒன்றை பரிசலிப்பதாக கூறினார், அதேபோல் செய்ததால் நாய்க்குட்டியை பரிசளித்தார்.

அதற்கு ஜிஞ்சர் எனப் பெயரிட்டார், மேலும், அலெக்சாண்டர் வாயில் இருக்கும் ஒரு குச்சி போன்ற சாதனத்தை பயன்படுத்தித் தான் 155 பக்கங்கள் கொண்ட தனது நினைவுக் குறிப்புகள் "Three minutes for Dog-My life in an Iron Lung" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இவருக்காக வடிவமைத்த நாற்காலி மூலம் நீதிமன்றன் சென்று வாதாடியும் இருக்கிறார்.