ஆண் குழந்தை இல்லை - மனைவியை காரில் தீவைத்து கொளுத்தி கனவன் வெறிச்செயல்!
மனைவியை கணவன் காருடன் தீயிட்டு கொளுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
குழந்தை விவகாரம்
மகாராஷ்டிரா, கார்லா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அமோல் - சவிதா தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆன நிலையில், திடீரென மனைவி கார் விபத்தில் உயிரிழந்ததாக கணவர் போலீஸில் புகாரளித்தார்.
அதன் படி விசாரணையில், இருவரும் காரில் ஷோகான் பகுதியில் உள்ள கஜ்னன் மகாராஜ் கோயிலுக்கு சென்று வந்துள்ளனர். திரும்பி வீட்டிற்கு வரும் போது காரின் பின்பகுதியில் வேன் ஒன்று இடித்ததாகவும் இதனால் காரை விட்டு கீழே இறங்கி அந்த வேன் டிரைவரிடம் சண்டை போட்டுக்கொண்டிருந்துள்ளார்.
கனவன் வெறிச்செயல்
அப்போது, கார் திடீரென தீப்பற்றி எரிந்து மனைவி சிக்கி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், இதில் சந்தேகமடைந்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், தனக்கு ஆண் குழந்தை வேண்டுமெனவும், மனைவியிடம் விவகாரத்து கேட்டும் தொடர்ச்சியாக கணவர் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்நிலையில், அதில் ஆத்திரமடைந்த அவர் காரை நிறுத்தி மனைவியை உள்ளுக்குள் வைத்து தீவைத்து கொளுத்தி அதை விபத்துபோல காட்டியுள்ளது தெரியவந்தது. தொடர்ந்து அமோல் கைது செய்யப்பட்டார்.