ஆட்டை பலிகொடுத்து உண்ட நபர் பலி, இப்படியும் மரணம் வருமா? - அதிர்ச்சி சம்பவம்!

India Death
By Vinothini Jul 05, 2023 05:13 AM GMT
Report

கோவிலில் ஆட்டை பலிகொடுத்து சாப்பிட்ட நபர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேண்டுதல்

சத்தீஸ்கர் மாநிலம், சூரஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாகர் சாய் என்பவர். இவருக்கு 50 வயது ஆகிய நிலையில், இவரது வேண்டுதல் ஒன்று நிறைவேறியதை தொடர்ந்து ஆடு ஒன்றை பலி கொடுக்க இருந்தார்.

man-kills-goat-and-died-by-eating-its-meat

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் மக்களுடன் ஒன்றாகக் கோயிலுக்குச் சென்று ஆட்டை பலியிடுவதற்கான சடங்கு சம்பிரதாயங்களை முடித்துவிட்டு பலியிட்டார். பின்னர், அந்த ஆட்டின் இறைச்சியை சமைத்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.

பலி

இந்நிலையில், அந்த ஆட்டை பலி கொடுத்த நபருக்கு அதன் கண் உணவில் வந்திருக்கிறது. இவரும் அதன் கண்ணை எடுத்துச் சாப்பிட்டார். அப்பொழுது இவரது தொண்டையில் கண் சிக்கிக்கொண்டது.

man-kills-goat-and-died-by-eating-its-meat

இதனால், இவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட, உடனே அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.