துடிதுடித்த மனைவி; அப்படியும் விடாத கணவன் - பார்க்கிங்கில் அரங்கேறிய கொடூரம்!
மனைவியை, கத்தியால் குத்தியும் காரை ஏற்றியும் கணவன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்து வேறுபாடு
அமெரிக்கா, புளோரிடாவில் வசித்து வருபவர் பிலிப் மேத்யூ. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது மனைவி மெரின் ஜாய்(26). மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்து வந்தார். இருவருக்கு தொடர்ந்து அடிக்கடி கருத்து வேறுபாடு நிலவியுள்ளது.
இதனால் ஒருகட்டத்தில் வெறுப்பான மனைவி பிரிந்து வாழ முடிவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
கொடூர கொலை
சம்பவத்தன்று மனைவி வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பிரிந்து சென்றுவிட்டதாக சந்தேகமடைந்துள்ளார். எனவே, உடனே மனைவி பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு அவர் பார்க்கிங்கில் வீடு திரும்ப கிளம்பியுள்ளார்.
அப்போது கோபமடைந்த கணவன், காரிலேயே மனைவி மீது மோதி பின் கத்தியால் 17 முறை குத்தியுள்ளார். இதில் உயிர் பிரியாததால் காரை அவர் மீது ஏற்றி உடல் நசுங்கியதும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அப்போது அன்கிருந்தவர்கள் துடித்துக்கொண்டிருந்த அவரை மீட்க முயலுகையில் என்னை கொன்றது கணவர்தான் எனக் கூறிவிட்டு உயிரிழந்த்துள்ளார்.
தொடர்ந்து, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் கணவனை கைது செய்துள்ளனர். மேலும் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த ராசியில் பிறந்தவங்க இறக்கும் வரை பணக்காரர்களாக இருப்பார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

ராஜயோகத்தை தட்டிச்செல்லும் இரு ராசிக்காரர்கள்- உங்களுக்கும் வாய்ப்பு உள்ளதா? இன்றைய ராசிபலன் Manithan
