முன்னாள் காதலியை காட்டிற்குள் அழைத்து கொன்று கிணற்றில் வீசிய காதலன் - கொடூர சம்பவம்!

Tamil nadu Attempted Murder Crime
By Vinothini Aug 17, 2023 01:15 PM GMT
Report

ஒருவர் தனது முன்னாள் காதலியை அளித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் காதலர்

சிவகாசி அருகே உள்ள சித்து ராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஷீலாராணி. இவருக்கு சுசீந்திரன் என்பவருடன் திருமணமாகி, 10 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர் வீட்டிலிருந்தபடியே பியூட்டி பார்லர் நடத்தி வந்துள்ளார்.

man-killed-his-ex-lover

ஷீலா ராணி திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு சிவகாசியை சேர்ந்த முகமது யாசின் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இருவரும் வேறு நபரை திருமணம் செய்து கொண்டு ஒரே ஊரில் தனி தனியே வாழ்ந்து வந்தனர்.

கொடூர கொலை

இந்நிலையில், திருமணம் ஆன பின்னரும் அவர்கள் இருவரும் போனில் தொடர்பு கொண்டு வந்தனர். பின்னர், சம்பவத்தன்று ஷீலாராணியை தனியே அழைத்த முகமதுயாசின், அவரிடம் தனது வறுமை நிலையை கூறி பணம் கேட்டு வற்புறுத்தியுள்ளார். தன்னிடம் பணம் இல்லை எனக்கூறிய ஷீலா ராணியை, திருத்தங்கல் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற முகமதுயாசின், அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் நகையை கேட்டுள்ளார்.

man-killed-his-ex-lover

அதற்கு அவர் கொடுக்க மறுத்துள்ளார், உடனே யாசின் அவரை அடித்து கொலை செய்துள்ளார். மேலும், பெண்ணின் சடலத்தை அருகில் உள்ள கிணற்றில் வீசி தப்பிச்சென்ற நிலையில், சடலத்தை கிணற்றிலிருந்து மீட்ட போலீசார், முகமதுயாசினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.