உ பி யை தொடர்ந்து ம.பி.யிலும்..மனித வேட்டையாடும் ஓநாய்கள் - அச்சத்தில் உறைந்த மக்கள்!

Uttar Pradesh India Madhya Pradesh
By Vidhya Senthil Sep 07, 2024 05:08 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்திலும் குடியிருப்புப் பகுதியில் நுழைந்து, மனிதர்களைத் ஓநாய்கள்  தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓநாய்கள் 

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக 7 குழந்தைகள், ஒரு பெண் என மொத்தம் 8 பேரை ஓநாய்கள் கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உ பி யை தொடர்ந்து ம.பி.யிலும்..மனித வேட்டையாடும் ஓநாய்கள் - அச்சத்தில் உறைந்த மக்கள்! | Man Hunting Wolves In Mp Too 5 Injured

மேலும் ஓநாய்கள் தாக்கியதில் இதுவரை 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த ஓநாய்க் கூட்டங்களால் சுமார் 50 கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கண்டதும் சுட முதல்வர் உத்தரவு - குழந்தைகளுக்கு அரங்கேறும் கொடூரம்!

கண்டதும் சுட முதல்வர் உத்தரவு - குழந்தைகளுக்கு அரங்கேறும் கொடூரம்!

தொடர்ந்து காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஓநாய்களைப் பிடிக்க ஆங்காங்கே பொறிகள், கூண்டுகள் வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

 தாக்குதல் 

இந்தச் சூழலில் மத்தியப் பிரதேச மாநிலம் கான்வா மாவட்டம் மல்கோவான் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 5 பேரைக் கடித்துக் குதறிய ஓநாயை அக்கம்பக்கத்தினர் திரண்டு விரட்டியடித்தனர்.

உ பி யை தொடர்ந்து ம.பி.யிலும்..மனித வேட்டையாடும் ஓநாய்கள் - அச்சத்தில் உறைந்த மக்கள்! | Man Hunting Wolves In Mp Too 5 Injured

தகவலறிந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்திலும் குடியிருப்புப் பகுதியில் நுழைந்து, மனிதர்களைத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.