கேரள ரயிலில் தமிழக மாடல் அழகி - வாலிபர் விடாமல் செய்த காரியம் - அதிர்ச்சி!

Kerala India Crime
By Jiyath Apr 19, 2024 01:00 PM GMT
Report

ஓடும் ரயிலில் இளம்பெண் ஒருவருடம் தகாத செயலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

மாடல் அழகி 

தமிழகத்தை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு ரயிலில் பயணம் செய்துள்ளார். அவர் சென்ற அதே ரயில் பெட்டியில் பயணம் செய்த வாலிபர் ஒருவர், மாடல் அழகியிடம் தகாத செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

கேரள ரயிலில் தமிழக மாடல் அழகி - வாலிபர் விடாமல் செய்த காரியம் - அதிர்ச்சி! | Man Held For Molesting Woman On Moving Train

இதனால் பயத்துடனேயே பயணம் செய்த மாடல் அழகி திருவனந்தபுரத்தில் இறங்கியதும் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு கோட்டயம் ரயில்வே போலீசாருக்கு மாற்றப்பட்டது.

தினசரி ரயில் டிக்கெட் எடுக்கும் கிராம மக்கள்; ஆனால் பயணிப்பதே இல்லை - என்ன காரணம்?

தினசரி ரயில் டிக்கெட் எடுக்கும் கிராம மக்கள்; ஆனால் பயணிப்பதே இல்லை - என்ன காரணம்?

வாலிபர் கைது 

அவர்கள் நடத்திய விசாரணையில், மாடல் அழகியிடம் தகாத செயல்களில் ஈடுபட்டவர் கொல்லத்தை சேர்ந்த அன்சர் கான் (25) என்பது தெரியவந்தது. மேலும் அவர் ஏற்கனவே சில குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

கேரள ரயிலில் தமிழக மாடல் அழகி - வாலிபர் விடாமல் செய்த காரியம் - அதிர்ச்சி! | Man Held For Molesting Woman On Moving Train

இதனையடுத்து சிசிடிவி பதிவுகள் மற்றும் செல்போன் கோபுர எல்லைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அன்சர் கானின் இருப்பிடத்தை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.