19 வயது பெண்ணை ஆசை வார்த்தைகளால் மயக்கி உல்லாசம்- லாவகமாக பிடித்த போலீசார்!

Sexual harassment Kerala Crime
By Vinothini Aug 10, 2023 05:28 AM GMT
Report

இளம்பெண்ணை மயக்கி உல்லாசமாக இருந்துவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் வலை

கேரள மாநிலம், பிலகாவ் விலங்கும்புரம் என்ற பகுதியை சேர்ந்தவர் அஜினாப், இவருக்கு 24 வயது. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் பேசி வந்துள்ளார்.

man-faked-her-lover-and-escaped

மேலும் அவர் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதன்பிறகு காரியம் முடிந்ததும் அந்த பெண்ணிடம் இருந்து விலக தொடங்கியுள்ளார். இதுகுறித்து அறிந்த பெண் உடனடியாக பனமரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது குறித்து அறிந்த அந்த இளைஞர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார்.

தீவிர தேடுதல்

இந்நிலையில், அஜினாப்பை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பெங்களூரு விமான நிலையம் உள்பட நாட்டில் உள்ள பல்வேறு விமான நிலையங்களுக்கு போலீசார் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. சம்பவம் நடந்து ஓராண்டுக்கு பிறகு அவர் வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டார்.

man-faked-her-lover-and-escaped

அவர் விமானம் மூலம் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு வந்தார். தற்பொழுது பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து போலீசார் அஜினாப்பை கைது செய்தனர். அதன்பிறகு கேரளா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.