மோமோஸ் சாப்பிட்ட இளைஞர் திடீரென மயங்கி உயிரிழந்த சோகம் - விளையாட்டு வினையானது!
பீகாரில் இளைஞர் ஒருவர் மோமோஸ் சாப்பிடும் போட்டியில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோமோஸ் சேலஞ்ச்
பீகாரின் கோபால்கஞ்ச் என்ற பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து இளைஞன் ஒருவர் ஜாலியாக மோமோஸ் சேலஞ்ச் செய்து விளையாடியுள்ளனர். அந்த சேலஞ்சில் ஒரே நேரத்தில் 150 மோமோஸ்களை சாப்பிட முயன்றுள்ளார். அவர் தொடர்ந்து மோமோக்களை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது சுயநினைவை இழந்து உயிரிழந்தார்.
விசாரணையில் அவர் சிஹோர்வா கிராமத்தைச் சேர்ந்த விபின் குமார் மஞ்சி (25) என தெரிய வந்தது. அவர் செல்போன் ரிப்பேர் பார்க்கும் கடை நடத்தி வந்துள்ளார், இவர் கடந்த வியாழக்கிழமை வேலை நேரம் முடிந்தவுடன் வழக்கம் போல் தனது நண்பர்களைச் சந்தித்துள்ளார். அப்போது அவர்கள் மோமோ சாப்பிடும் போட்டியை விளையாடியுள்ளனர்.
உயிரிழப்பு
இந்நிலையில், சேலஞ்சை ஏற்று பாஸ்வான் அதிகப்படியான மோமோக்களை குறைந்த நேரத்தில் சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு கொஞ்ச நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். இறந்த இளைஞரின் தந்தை அவரது நண்பர்கள் தான் தனது மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றதாக கூறியுள்ளார். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.