சந்தையில் பெண்ணின் மார்பகத்தை வெட்டி கொடூர கொலை - பின்னணி என்ன!
சந்தையில் பெண்ணின் மார்பகம் உள்ளிட்ட உறுப்புகளை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடன் விவகாரம்
பீகார், பாகல்பூர் பிர்பைண்டியை சேர்ந்தவர் அசோக் யாதவ். இவரது மனைவி நீலம் தேவி(10). மளிகைக் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நீலம் தேவி தனது மகனுடன் அருகே உள்ள சந்தையில் வழக்கம்போல் பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார்.
அப்போது திடீரென வந்த நபர் ஒருவர் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, அனைவரின் முன்னிலையிலும் அந்தப் பெண்ணை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். மேலும், அவரின் கை, காது மற்றும் மார்பகங்களை வெட்டியுள்ளார்.
கொடூர கொலை
காலை வெட்ட முற்படுகையில் கூட்டம் கூடியதால் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அதனையடுத்து அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அதிக ரத்தப்போக்கின் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண் இதற்கிடையில் போலீஸாரிடம் கொலையாளியின் பெயரை கூறியதாக தெரிகிறது. விசாரணையில், அதே ஊரைச்சேர்ந்த ஷகீல் அகமது என்பவர், இந்தப் பெண் கடன் வாங்கிக் கொண்டு திருப்பி தராததால் கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.