இலவச பஸ்ஸுக்காக பெண் வேடத்தில் வந்த நபர் - வசமாக சிக்கியதால் பரபரப்பு!

Karnataka India
By Vinothini Jul 07, 2023 06:48 AM GMT
Report

கர்நாடகாவில் ஒருவர் இலவசமாக பயணிப்பதற்காக பெண் வேடம் அணிந்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலவச பஸ்

கர்நாடகாவில், சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. தேர்தல் சமயத்தில் இவர்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான மகளிருக்கு இலவச பஸ் திட்டத்தை ஜூன் 11-ம் தேதி முதல் அமல்படுத்தபட்டது. இதனால் ஏராளமான பெண்கள் பஸ்சில் இலவசமாக பயணித்து வருகின்றனர்.

man-caught-in-burqa-to-get-benefit-of-women-bus

தற்பொழுது தர்வார் மாவட்டம், குந்துகோல் தாலுகா சம்சி பஸ் நிலையத்தில் நேற்று காலை, பர்தா அணிந்த ஒரு பெண் அமர்ந்திருந்தார், அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது.

விசாரணை

இந்நிலையில், அங்கிருந்த பெண்கள் அவர் அருகில் சென்று பர்தாவை நீக்குமாறு கூறினார், அப்பொழுது அவர் நீக்க மறுத்தார். அதன்பிறது அந்த பெண்கள் வலுக்கட்டாயமாக இழுத்து அவரது பர்தாவை அகற்றி வேடத்தை கலைத்தனர், அப்பொழுது தான் அவர் பெண்ணல்ல ஆண் என்பது தெரியவந்தது

man-caught-in-burqa-to-get-benefit-of-women-bus

 இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்த நபரிடம் விசாரித்தபொழுது இவர் பஸ்ஸில் இலவசமாக பயணிப்பதற்காக இவ்வாறு வேடம் அணிந்து வந்ததாக கூறியுள்ளார்.

man-caught-in-burqa-to-get-benefit-of-women-bus

மேலும் விசாரணையில், அவர் விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி கோடகேரியைச் சேர்ந்த வீரபத்ரையா நிங்கய்ய (வயது 40) என்பது தெரிந்தது.

இவரிடன் ஒரு பெண் புகைப்படத்துடன் ஆதார் ஒன்று இருந்தது. இதனால் சந்தேகத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.