இதோ.. இந்த பாம்புதான் கடித்தது.. கையோடு எடுத்து வந்த நபர் - அலறிய மருத்துவமனை!

India Snake Bihar
By Swetha Oct 17, 2024 05:10 AM GMT
Report

கையில் பாம்புடன் நபர் ஒருவர் மருத்துவமனைக்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பாம்பு

பீகார் மாநிலம் பாகல்பூரை சேர்ந்த பிரகாஷ் மண்டல் என்ற நபரை உலகின் மிக விஷ பாம்புகளில் ஒன்று கடித்தது. தன்னை கடித்த விஷ பாம்பின் வாயை பிடித்து, கழுத்தில் சுற்றிக் கொண்டு நேரடியாக மருத்துவமனைக்குச் சென்றார்.

இதோ.. இந்த பாம்புதான் கடித்தது.. கையோடு எடுத்து வந்த நபர் - அலறிய மருத்துவமனை! | Man Brings Snake Along With Him To The Hospital

பாம்பு கடித்த நிலையில், அதனை கையில் வைத்துக் கொண்டு அவசர சிகிச்சை பிரிவில் நின்றுக் கொண்டிருந்த நபரை பார்த்து டாக்டர்களும், நோயாளிகளும் திகைத்தனர். சிறிது நேரம் காத்திருந்த நபர் வலி தாங்க முடியாமல், கையில் பாம்பை பிடித்தவாரே அங்கு படுத்துக்கொண்டு சிகிச்சைக்காக காத்திருந்தார்.

பொம்மை என நினைத்து பாம்பை கடித்த 1 வயது குழந்தை - பலியான பாம்பு

பொம்மை என நினைத்து பாம்பை கடித்த 1 வயது குழந்தை - பலியான பாம்பு

நபர் 

நோயாளிகளின் உதவியாளர்கள் அந்த நபரின் கையிலிருந்து பாம்பு தப்பித்துவிட்டால், எதுவும் நடக்கலாம் என்று பயந்து தூரத்தில் நின்று கொண்டிருந்தனர். வளாகத்தில் உள்ள அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக

இதோ.. இந்த பாம்புதான் கடித்தது.. கையோடு எடுத்து வந்த நபர் - அலறிய மருத்துவமனை! | Man Brings Snake Along With Him To The Hospital

அங்கிருந்த வேறொரு நபர் பிரகாஷின் கையைப் பிடித்து அவரை ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்றார். இந்த நிலையில், பாம்பை வைத்திருக்கும் நபருக்கு எப்படி சிகிச்சையளிக்க முடியும் என்ற அச்சம் கலந்த குழப்பத்தில் மருத்துவர்கள் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து சிகிச்சைக்கு தொடர்ந்து தாமதமானதை அடுத்து பிரகாஷ் அந்த பாம்பை விடுவித்துள்ளார். அவருக்கு அதன்பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டதா, அவரின் தற்போதைய நிலை கேள்விக்குறியாகவே உள்ளது.