டெட் பாடியுடன் கால் டாக்ஸிக்குள் ஏறிய நபர் - மிரண்டுபோன டிரைவர்!

Attempted Murder Uttar Pradesh Death
By Vinothini Jul 17, 2023 05:02 PM GMT
Report

உத்திர பிரதேசத்தில் டெட் பாடியுடன் வந்து காரில் ஏறிய நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கால் டாக்ஸி

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோஜ். ஓலா கார் டிரைவரான இவருக்கு, கடந்த 11-ம் தேதி இரவு நொய்டாவிலிருந்து செல்ல வேண்டுமென புக்கிங் ஒன்று வந்திருக்கிறது. அதனை சவுரப் என்பவர் புக் செய்துள்ளார், அப்பொழுது மனனோஜும் சென்றுள்ளார்.

man-booked-cab-to-dispose-deadbody

சவுரப்புடன் இன்னொருவர் இருந்தார். அவர்கள் இருவரும், சில சாக்குமூட்டைகளை கார் டிக்கியில் வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். இவரும் டிக்கியைத் திறந்தபோது, எடுத்துவைக்கப்பட்ட மூட்டைகளில் ஒன்றில் சிறு அசைவும், ரத்தக் கரையும் இருந்திருக்கிறது, இதனை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கொலை

இந்நிலையில், அந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று இவர் கேட்டுள்ளார். அப்பொழுது இருவரும் சேர்ந்து இவரை தாக்க தொடங்கியுள்ளனர். டிரைவர் நெடுஞ்சாலையில் நின்றிருந்த பேட்ரோல் போலீஸாருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். மகாராஜ்பூர் போலீஸாரையும் அணுகி நடந்தவற்றை விளக்கியிருக்கிறார்.

man-booked-cab-to-dispose-deadbody

இது குறித்து விசாரணை நடத்தியதில், "கடந்த 11-ம் தேதி மாலை, குசும் குமாரி என்பவரும், அவரின் மைத்துனர் சவுரப்பும் மகாராஜபூருக்கு வந்திருக்கிறார்கள். குசும் குமாரிக்கு அவர்களின் மூதாதையரின் சொத்திலிருந்து சுமார் ரூ.40 கோடி வரவிருந்த நிலையில், குசும் குமாரிக்கும் சவுரப்புக்கும் அது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

அதனால் அவரை கொலைசெய்ய வேண்டும் என ஏற்கெனவே திட்டமிட்ட சவுரப், மகராஜ்பூருக்கு அவரது கூட்டாளிகளை வரவழைத்து கொலை செய்துள்ளனர். அந்த உடலை கார் புக் செய்து அப்புறப்படுத்த முயன்றிருக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.