நடுரோட்டில் அரிவாளுடன் துரத்திய நபர் - ஓட்டம் பிடித்த கல்லுாரி மாணவி...தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!
புனேவில் ஒரு நபர் கல்லூரி மாணவியை துரத்தி துரத்தி வெட்டிய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாணவி
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் வசித்து வருபவர் பிரீத்தி ராம்சந்திரா. கல்லூரி மாணவியான இவர் நேற்று தனது உறவினர் ஒருவருடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் பெருங்கேட் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இவர்களை அதே பகுதியை சேர்ந்த 22 வயதான சாந்தனு லட்சுமன் ஜாதவ் என்பவர் கையில் கத்தி அரிவாளுடன் அவர்களை துரத்தியுள்ளார்.
இதில் அந்த வாலிபர் காயமடைந்தார், அங்கிருந்து தப்பி ஓடும்போது அந்த மாணவியை துரத்தி சரமாரியாக வெட்டியுள்ளார்.
வைரல் வீடியோ
இந்நிலையில், அந்த மாணவிக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர் . பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
पुणे शहरात भररस्त्यात तरुणीच्या मागे कोयता घेऊन धावणाऱ्या तरुणाला अडवून त्या मुलीचे दोन धाडशी तरुणांनी प्रसंगावधान राखून प्राण वाचवले. या तरुणांनी दाखविलेले धाडस अतिशय कौतुकास्पद आहे. मुलीवर प्राणघातक हल्ला होत असताना आपल्या प्राणाची पर्वा केली नाही. pic.twitter.com/X7m2od4HmG
— Supriya Sule (@supriya_sule) June 27, 2023
மேலும், படுகாயம் அடைந்த அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது. இதனிடையே அந்த மாணவியை விரட்டி தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.