ரயிலில் மாணவிகள் கண் முன்னே ஆபாச செயலில் ஈடுபட்ட நபர் - அதிர்ச்சி!
மாணவிகளில் கண் முன்னர் ஒருவர் ஆபாச செயலில் ஈடுபட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயிலில் ஆபாசம்
கேரளா மாநிலத்தில், கோயம்புத்தூர் - மங்களூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் மாணவிகள் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களது சீட்டின் முன்புரமாக ஒரு நபர் அவரது அந்தரங்கத்தில் ஏதோ செய்வதாக உணர்ந்த மாணவிகள் அதனை வீடியோ பதிவு செய்துள்ளனர்.
அந்த நபர் ஆபாசம் செயலில் ஈடுபட்டுள்ளார். மேலும், அந்த மாணவிகள் வீடியோ பதிவு செய்து அதனை வைத்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விசாரணை
இந்நிலையில், சக பயணியர்கள் அவரை பிடித்து காசர்கோடு ரயில் நிலையம் வந்தவுடன் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணையில், அவரது பெயர் ஜார்ஜ் என்பதும் அவர் கண்ணூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில், அந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.