நடுவானில் பறந்த ஏர் இந்தியா விமானத்தில் மலம் கழித்த நபர் கைது..!
டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த போது நடுவானில் பயணி ஒருவர் மலம் மற்றும் சிறுநீர் கழித்ததாக கூறி பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானத்தில் மலம் கழித்த நபர்
கடந்த 24 ஆம் தேதி ஏஐசி 866 ரக ஏர் இந்தியா விமானம் மும்பையில் இருந்து டெல்லி சென்ற போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இருக்கை எண் 17எப்- ல் இருந்த பயணி ராம் சிங் என்பவர் விமானத்தில் 9வது வரிசையில் மலம் மற்றும் சிறுநீர் கழித்து துப்பியுள்ளார்.
இந்த செயலுக்கு விமான பணியாளர்கள் அவருக்கு வாய்மொழியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். பின்னர் விமானியின் கமாண்டிற்கும் நிலைமை குறித்து தெரிவிக்கப்பட்டது.
வழக்குப்பதிவு செய்து கைது
இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தின் பாதுகாப்புத் தலைவர் சம்மந்தப்பட்ட பயணியை உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
இதையடுத்து பயணி ராம் சிங் என்பவர் மீது இந்திய தண்டனை சட்டம் 294 (ஆபாசமான செயல்கள்) மற்றும் 510 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.