கொழுந்தியாவுடன் ஓட்டம் பிடித்த இளைஞர் - பழிவாங்க மைத்துனர் செய்த செயல்!
அக்கா கணவரை பழிவாங்க, இளைஞர் செய்த செயல் பேசுபொருளாகியுள்ளது.
முறை தவறிய உறவு
உத்தரபிரதேசம், கமலுபீர் கிராமத்தை சேர்ந்தவர் கேசவ் குமார்(28). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
ஒரே ஊரில் இருக்கும் மாமியார் வீட்டுக்கு அடிக்கடி சென்றுவந்தபோது அவருக்கும், அவருடைய கொழுந்தியாள் கல்பனாவுக்கும் (19) இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
திணறிய குடும்பம்
இதனையறிந்த குடும்பத்தினர் கண்டித்ததால், இருவரும் வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மைத்துனன் ரவீந்திரன்(22) அக்கா கணவரை பழிவாங்க, அவரது தங்கையை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு ஓடினார்.
ஏற்கனவே இருவரும் காதலித்து வந்தனர். இதுகுறித்து இரு குடும்பத்தினரும் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு ஜோடிகளையும் தேடிவந்த நிலையில் அவர்கள் 4 பேரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் அவர்களை இரு குடும்பத்தினரும் மன்னித்து ஏற்றுக்கொண்டனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.