சாலையோர கடையில் பானிபூரி தயாரித்து அசத்தும் மம்தா பானர்ஜி!
டார்ஜிலிங்கில் சாலையோர கடையில் பானி பூரி தயாரித்து மக்களுக்கு வழங்கி அசத்தினார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.
டார்ஜிலிங்கில் சுற்றுப்பயணம்
மலைகளின் ராணியான டார்ஜிலிங் நகரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாகக்குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில்
கலந்துக்கொள்வதற்காக வந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
பானி பூரி விற்பனை
சாலையோரத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் நடத்தி வருகின்ற 'சண்டே ஹாட்' என்ற பானி பூரி கடைக்கு சென்றார்.
Our Hon’ble Chairperson @MamataOfficial visited SHG operated food stall, Sunday Haat in Darjeeling.
— All India Trinamool Congress (@AITCofficial) July 12, 2022
Showing her appreciation for the women’s hard work, she joined them in the preparation of Bengal’s favorite, Puchkas and also fed enthusiastic children the delectable snack! pic.twitter.com/ApBZeRDbao
அங்கு பணியாற்றும் பெண்களின் உழைப்பை பாராட்டினார். அந்த பெண்களுடன் சேர்ந்து பானி பூரி தயாரித்து அதை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கினார்.
வைரலாகும் வீடியோ
இந்த காட்சிகள் கொண்ட வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு முன்பு டார்ஜிலிங்குக்கு அவர் சென்ற போது சாலையோர கடைகளில் மோமோ, டீ ஆகியவற்றை செய்து மக்களுக்கு வழங்கியிருக்கிறார்.