தேச தந்தை மகாத்மா காந்தியின் பேரன் காலமானார்..!
தேச தந்தை மகாத்மா காந்தியின் பேரன் அருண் மணிலால் காந்தி மராட்டியத்தில் காலமானார்.
மகாத்மா காந்தியின் பேரன் காலமானார்
மகாத்மா காந்தியின் பேரனும், எழுத்தாளருமான அருண் மணிலால் காந்தி மராட்டியத்தில் உள்ள கோலாப்பூரில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவருக்கு வயது 89.

காந்தியின் மகனான மணிலால் காந்திக்கும் சுசீலா மஷ்ருவாலா ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் அருண் மணிலால்.
தனது தாத்தாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிய அவர் ஓரு ஆர்வலராக வலம் வந்தார். இருந்த போதும் தனது தாத்தாவின் துறவு வாழ்க்கை முறையைத் தவிர்த்து விட்டார்.
தலைவர்கள் இரங்கல்
இவர் The Gift of Anger: And Other Lessons From My Grandfather Mahatma Gandhi ஆகிய புத்தகங்களை வெளியிட்டார்.
காந்தியின் பேரனான அருண் மணிலால் காந்தியின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.