ரீல்ஸ் ஆசையால் 300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் - பதற வைக்கும் வீடியோ

Maharashtra Accident
By Karthikraja Jun 18, 2024 11:45 AM GMT
Report

பெண் ஒருவர் பிரேக் அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அழுத்தியதால் 300 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து பெண் பலியான வீடியோ நெஞ்சை பதற வைக்கிறது.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா மாநிலம் சுளிபஞ்சன் என்கிற பகுதியில் ஸ்வேதா சர்வசே என்கிற 23 வயதான பெண் தன் நண்பனிடம் தான் கார் ஓட்டுவதை வீடியோ எடுக்குமாறு தெரிவித்துள்ளார்.அப்போது கார் ரிவர்ஸ் கியரில் இருந்துள்ளது, தொடக்கத்தில் காரை மெதுவாக நகர்த்திய அந்த பெண், பிரேக் அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அழுத்தியதால் கார் வேகமாக பின்னோக்கி செல்கிறது.  

maharastra car felt on 300 feet while reverse

வீடியோ எடுக்கும் நண்பர் கிளட்ச்சை அழுத்த சொல்லி கத்திக்கொண்டே, ஸ்வேதாவுக்கு உதவ ஓடிச் செல்கிறார். ஆனால், அதற்குள் கார் மின்னல் வேகத்தில் 300 அடி பள்ளத்தாக்கில் பாய்கிறது. 

பள்ளி மாணவிகளை சீரழித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மன்னன் - செல்போன் சோதனையில் அதிர்ந்த போலீசார்!

பள்ளி மாணவிகளை சீரழித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மன்னன் - செல்போன் சோதனையில் அதிர்ந்த போலீசார்!

மீட்பு படை

இதன் பின் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்ற 1 மணி நேரத்திற்கு மேல் ஆகியுள்ளது. சிதிலமடைந்த காரில் இருந்த ஸ்வேதாவை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

maharastra car felt on 300 feet while reverse

பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். நெஞ்சை பதற வைக்கும் அந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.