அமாவாசை 2024: இந்த ஒரு வழிபாடு போதும் - அவசியம் நோட் பண்ணுங்க!

Festival
By Sumathi Sep 28, 2024 09:57 AM GMT
Report

அமாவாசையில் வழிபடும் பூஜைகள் குறித்து அறிந்துக் கொள்வோம்.

மகாளய அமாவாசை

பித்ரு பட்சம் என்று அழைக்கப்படும் மகாளய அமாவாசை இந்துக்களிடையே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முன்னோர்களை வழிபடுவதற்காக இந்த நாள் அற்பணிக்கப்படுகிறது.

அமாவாசை 2024: இந்த ஒரு வழிபாடு போதும் - அவசியம் நோட் பண்ணுங்க! | Mahalaya Amavasai 2024 Valipaadu Details

இந்த சமயத்தில் மக்கள் இறந்தவர்களின் ஆன்மாக்களை சாந்திபடுத்த பல்வேறு வகையான பூஜைகளை செய்து அவர்களை வழிபடுவது வழக்கம். இந்நாளில் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைப்பதாக நம்பப்படுகிறது.

கல்யாணம் தாமதமாகிறதா? இதை மட்டும் செய்யுங்க - உடனே முடிவாகும்!

கல்யாணம் தாமதமாகிறதா? இதை மட்டும் செய்யுங்க - உடனே முடிவாகும்!

வழிபாட்டு முறை

அரச மரம் என்பது அனைத்து கடவுள்களும் குடியிருக்கும் ஒரு மரமாக கருதப்படுகிறது. நமது முன்னோர்களும் அதில் வசிப்பதாக சொல்லப்படுகிறது. மகாளய அமாவாசை அன்று அரச மரத்தடியில் விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் உங்கள் முன்னோர்களின் ஆசிர்வாதம் நிச்சயமாக உங்களுக்கு கிடைக்கும்.

அமாவாசை 2024: இந்த ஒரு வழிபாடு போதும் - அவசியம் நோட் பண்ணுங்க! | Mahalaya Amavasai 2024 Valipaadu Details

இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் முன்னோர்கள் உங்களுக்கு சரியான வாழ்க்கை பாதையை காட்டி வெற்றி பெறச் செய்வார்கள். மேலும், அன்று முன் வாசப்படியில் விளக்கு ஏற்றி வைப்பது நல்லது. தெற்கு திசை என்பது எமதர்மனின் திசையாக கருதப்படுகிறது.

எனவே அந்த திசையில் விளக்கு ஏற்றி வைப்பது முன்னோர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைவதற்கு உதவும். நான்கு முகம் கொண்ட விளக்கை தெற்கு திசையில் ஏற்றி வைப்பதன் மூலமாக நீங்கள் பித்ரு தோஷத்தில் இருந்து விடுபடலாம்.