உங்க வருத்தம் தான் அவங்க மகிழ்ச்சி; மகாலட்சுமியோடு பிரச்சனை? ரவீந்தர் வருத்தம்
ரவீந்தர் சமூக வலைத்தளத்தில் சோகமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மகாலெட்சுமி-ரவீந்தர்
சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.இவர்களின் திருமணம் திருப்பதியில் நடந்தது. இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.

சமீபத்தில் தான் தங்களின் 6-வது மாத திருமண நாளை சிறப்பாகக் கொண்டாடினார்கள். மேலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இருவரும், கோவில், ஹோட்டல் என பொது இடங்களில் ஒன்றாக வலம் வருகின்றனர்.
பதிவால் குழப்பம்
அவ்வப்போது முன்னணி யூடியூப் ஊடகங்களிலும் பேட்டி அளித்து வருகின்றனர். அது குறித்த புகைப்படங்களை அவ்வப்போது பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், ரவீந்தர்
வாழ்வதற்கான காரணம் கடினமான நேரங்களில் புன்னகையை நேசிப்பதே, ஏனெனில் அவர்கள் உங்களின் வருத்தத்தில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.  
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    