சிறையில் இருந்து வெளிவந்த கணவர் ரவீந்தர்...ஒரே போஸ்ட்டால் உருக வைத்த மகாலக்ஷ்மி

Ravinder Chandrasekar Mahalakshmi
By Karthick Oct 10, 2023 09:52 AM GMT
Report

சிறையில் இருந்து வெளிவந்துள்ள கணவர் குறித்து நடிகை மஹாலக்ஷ்மி பதிவிட்டுள்ளது கவனத்தை பெற்றுள்ளது. 

ரவீந்தர் மோசடி

சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்ததன் மூலம் பிரபலமானவர் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர்.லிப்ரா புரோடக்சன்ஸ்பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

mahalakshmi-instagram-post-about-ravinder

முதலீடு செய்தால் நல்ல லாபம் தருவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்து ரூ.16 கோடி வரை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.இதனால் செப்டம்பர் மாதம் 7 ம் தேதி கைது செய்யப்பட்டார்.

நிபந்தனை ஜாமீன்

இந்நிலையில், இந்த வழக்கில் தயாரிப்பாளர் ரவீந்தருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 வாரங்களில் 5 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்த ரவிந்தருக்கு ஐகோர்ட் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

mahalakshmi-instagram-post-about-ravinder

ரவீந்தர் வாங்கி கணக்கில் பல பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளது என காவல்துறை குறிப்பிட்ட நிலையில் ஆனால் அவை இந்த வழக்கில் தொடர்புடையபவையா? என்று தெரியவில்லை என தெரிவித்த நிலையில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கி படுத்த படுக்கையான விஜே மணிமேகலை!!

விபத்தில் சிக்கி படுத்த படுக்கையான விஜே மணிமேகலை!!

உருகவைத்த மஹாலக்ஷ்மி

இந்நிலையில், வெளிவந்துள்ள தனது கணவர் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக நடிகை மஹாலக்ஷ்மி பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, “U never fail to bring smile on me.. The reason for love on any one is trust. But here trust loves u more than me!! Shower the same love and protect me like before.. Love you loadsssss Ammu’ என்று பதிவு செய்துள்ளார்.