இளைஞரை செருப்பால் அடித்து காலை நக்க வைத்த கொடூரம் - பதைபதைக்க வைக்கும் சம்பவம்!
இளைஞர் ஒருவரை தனது காலை நக்க வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடூர தாக்குதல்
மத்தியப்பிரதேசம், குவாலியர் மாவட்டத்தில் உள்ள தப்ரா பகுதியில் கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக வெளியான வீடியோ வைரலாகி வருகிறது.
அதில், வேகமாக ஓடி கொண்டிருக்கும் காரில் நான்கைந்து இளைஞர்களுக்கு மத்தியில் இளைஞர் ஒருவரை அமர வைத்து சரமாரியாக தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், அந்த இளைஞரை செருப்பால் அடித்தும், காலை நக்க சொல்லியும் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதிர்ச்சி வீடியோ
இதனை பதிவிட்ட நபர் அந்த வீடியோவில் உள்ள நபர் மோஷின் கான் என்ற இஸ்லாமிய இளைஞர் என்றும், அவரை தாக்குவது கோலு குர்ஜார் என்ற நபர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
In a viral video from Madhya Pradesh's Gwalior, Golu Gurjar is seen mercilessly thrashing a Muslim youth named Mohsin Khan with his friends and forcing him to lick his feet. They kidnapped Mohsin 7-8 days ago and took him in their vehicle. pic.twitter.com/9H10laq73f
— Meer Faisal (@meerfaisal01) July 8, 2023
தொடர்ந்து, வீடியோ வைரலான நிலையில் விவகாரம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. அதன்பின், ம.பி முதல்வர் அவரது கால்களை கழுவி விட்டு வீட்டிற்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.