பட்டியலின சிறுவனை அடித்து உதைத்து கால்களை நக்க வைத்த அதிர்ச்சி வீடியோ வைரல் - அதிரடி காட்டிய போலீசார்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவியது. அந்த வீடியோவில், சிறுவனை இளைஞர்கள் சிலர் அடித்து உதைக்கிறார்கள். அந்த சிறுவனின் சாதிப் பெயரைச் சொல்லி அந்த இளைஞர்கள் சராமரியாக திட்டுகிறார்கள்.
அந்த சிறுவன் அந்த இளைஞர்களை பார்த்து பயந்து நடுங்குகிறான். அப்போது, அந்த சிறுவன் கீழே பயந்து உட்கார்கிறான். அப்போது, அந்த இளைஞர்கள் சுற்றி நின்று கொண்டு கையை தட்டி சிரிக்கிறார்கள்.
அதன் பிறகு, ஒரு இளைஞன் பைக்கில் உட்கார்ந்து கொண்டு, அந்த சிறுவனை தனது கால்களை நக்கச் சொல்கிறான். அந்த சிறுவனும் பயந்து கொண்டு அந்த இளைஞனின் காலை நடுங்கிக்கொண்டே நக்குகிறான்.
இதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட, இந்த வீடியோ பெரும் சர்ச்சையாக மாறியது. இந்த வீடியோ குறித்து புகார் போலீசாருக்கு சென்றது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், உத்தரபிரதேச மாநிலம், ரேபரேலி பகுதியில் இந்தச் சம்பவம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், பத்தாம் வகுப்பு படித்து வந்த இந்த மாணவர், தந்தை இறந்துவிட்டதால் தாயுடன் வசித்து வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்த சிறுவனின் தாய் குற்றம் சாட்டப்பட்ட சிலருக்கு சொந்தமான வயல்களில் வேலை செய்து வந்திருக்கிறார். அந்த வேலைக்கான கூலி தராததால் சிறுவன் சென்று தட்டிக் கேட்டதால் தான் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் இப்படி அந்த சிறுவனை அடித்து உதைத்து தண்டனை கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 10ம் தேதி நடந்த இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக 7 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.