சிறுமியுடன் உறவு; ஆண்கள் குற்றவாளிகள் அல்ல, வயதை குறைக்கனும் - நீதிமன்றம் கருத்து

Madhya Pradesh
By Sumathi Jul 01, 2023 10:42 AM GMT
Report

பாலுறவுக்கான சம்மத வயதை 18-இல் இருந்து 16-ஆக குறைக்க மத்திய அரசு பரிசீலிக்க நீதிமன்றம் கோரியுள்ளது.

பாலியல் வழக்கு 

மத்திய பிரதேசம், 16 வயது சிறுமியை 20 வயது இளைஞர், 6 மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும், கர்ப்பமாக்கியதாகவும் வழக்கு பதி செய்யப்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகள் இளைஞர் ஜாமீன் இல்லாமல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறுமியுடன் உறவு; ஆண்கள் குற்றவாளிகள் அல்ல, வயதை குறைக்கனும் - நீதிமன்றம் கருத்து | Madhya Pradesh High Court Women Consent Age To 16

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், "2012 ஆம் ஆண்டு, பாலுறவு சம்மத வயதை 16 லிருந்து 18 ஆக உயர்த்திய சட்டத் திருத்தம் சமூகத்தின் கட்டமைப்பை சீர்குலைத்துள்ளது. தற்போது, ​​14 வயதிற்குட்பட்ட ஆணும் பெண்ணும், சமூக ஊடகத்தின் வழியாக கிடைத்த விழிப்புணர்வு காரணமாகவும்

நீதிமன்றம் கருத்து

எளிதில் கிடைக்கக்கூடிய இணைய வசதி காரணமாகவும் இளம் வயதிலேயே பருவமடைகின்றனர். இளம் வயதிலேயே பருவமடைதல் காரணமாக ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படுகிறார்கள். இறுதியில் ஒருமித்த சம்மதத்துடன் பாலியல் உறவில் ஈடுபடுகின்றனர்.

சிறுமியுடன் உறவு; ஆண்கள் குற்றவாளிகள் அல்ல, வயதை குறைக்கனும் - நீதிமன்றம் கருத்து | Madhya Pradesh High Court Women Consent Age To 16

இந்த வழக்குகளில், ஆண்கள் குற்றவாளிகள் அல்ல. பருவ வயது சிறுவர்கள் குற்றவாளிகளாக நடத்தப்படும் அநீதியை தவிர்க்க, பாலுறவு சம்மத வயதை 18இல் இருந்து 16 ஆக குறைக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளது.