மாதம்பட்டி ரங்கராஜின் 2வது மனைவியின் முதல் கணவர் இயக்குனரா? பின்னணி என்ன!
ஜோய் கிரிசில்டாவின் முதல் கணவர் பிரபல இயக்குனர் என்பது தெரிய வந்துள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம்
'மெஹந்தி சர்க்கஸ்' திரைப்படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். அதன் பிறகு அவர் பெரிய அளவில் வேறு எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை.
பின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் நடுவராக வலம் வந்தார். இதற்கிடையில் தமிழ்நாட்டில் மிகவும் அறியப்பட்ட சமையல் கலைஞர்களில் ஒருவராக உருவெடுத்தார். பிரதமர் முதல் திரைப் பிரபலங்கள் வரை பலருக்கும் அவர்களது வீட்டு விசேஷங்களுக்கு சமைத்து மிகவும் பிரபலமானார்.
யார் இந்த ஜாய்?
இவருக்கு ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். மனைவியுடன் கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்றதாக தகவல் பரவியது. இந்நிலையில் 2வதாக மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவை கோவிலில் எளிய முறையில் திருமணம் செய்துகொண்டனர்.
ஜோய் கிரிசில்டாவுக்கும் இது இரண்டாவது திருமணம் தான். முதல் கணவர் ஜேஜே ஃப்ரெடிரிக் திரையுலகை சேர்ந்தவர். ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
தொடர்ந்து பிரசாந்த் நடித்து வெளியான அந்தகன் படத்தை அவர் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் படத்தை இயக்க முடியவில்லை. இவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.