களமிறங்கிய தோனி; பதறிய டி காக் மனைவி, வைரல் பதிவு - என்ன நடந்தது?
டி காக் மனைவி தோனி குறித்து பகிர்ந்த பதிவொன்று வைரலாகி வருகிறது.
தோனி வருகை
17-வது ஐ.பி.எல். இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் இறுதியாக லக்னோவில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்தது.
வைரல் பதிவு
லக்னோ அணி, 19 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், தோனி பேட்டிங் செய்ய வந்தபோது, லக்னோவின் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர்.
Quinton De Kock's wife Instagram story when MS Dhoni came to bat. pic.twitter.com/AjnaAC2bMH
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 19, 2024
ரசிகர்கள் எழுப்பிய சத்தம் ஷோர் மீட்டரில்' 124 டி.பி எனக் காட்டியது. இதனால் ஸ்மார்ட் வாட்ச்சில் பதிவான எச்சரிக்கையை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் லக்னோ வீரர் குயிண்டன் டி காக்கின் மனைவி ஷாஷா பகிர்ந்துள்ளார்.
இந்தப் பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
9 பந்துகளை எதிர்கொண்ட தோனி 3 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 28 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.