கன்முன்னே உயிரிழந்த காதலி.. பஸ் முன் பாய்ந்து காதலனும் உயிரை விட்ட சோகம்!

Chennai Accident Death
By Swetha Oct 07, 2024 04:30 AM GMT
Report

காதலி பலியானதால் காதலன் வாகனத்தில் மோதி இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலி.. 

செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு பொறியியல் படித்து வந்தவர் யோகேஷ்வரன். இவர் தன்னுடன் படித்து வந்த சபரீனா என்ற பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கன்முன்னே உயிரிழந்த காதலி.. பஸ் முன் பாய்ந்து காதலனும் உயிரை விட்ட சோகம்! | Lover Died In A Accident Youth Commit Suicide

கல்லூரி விடுமுறை என்றாலே இருவரும் அடிக்கடி வெளியே பைக்கில் ரைட் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால் அவர்கள் 2 பேரும் மாமல்லபுரம் வரை சென்றுள்ளனா்.

அப்போது முன்னால் சென்றுகொண்டிருந்த புதுச்சேரி தனியார் பேருந்தை முந்தி செல்வதற்கு யோகேஷ்வரன் முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது பேருந்து அவர்களது இருசக்கர வாகனம் மீது மோதி உள்ளது.

தற்காலிக ஓட்டுனரால் ஏற்பட்ட பயங்கர விபத்து - கடை - கார்களில் மோதி விபத்து

தற்காலிக ஓட்டுனரால் ஏற்பட்ட பயங்கர விபத்து - கடை - கார்களில் மோதி விபத்து

காதலன்

அதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விழுந்து உருண்டதில் பின்னால் இருந்த காதலி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

கன்முன்னே உயிரிழந்த காதலி.. பஸ் முன் பாய்ந்து காதலனும் உயிரை விட்ட சோகம்! | Lover Died In A Accident Youth Commit Suicide

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த யோகேஷ்வரன் கண்ணீர் விட்டு கதறி அழுதார். மேலும் தனது காதலி உயிரிழந்து கிடப்பதை தாங்க முடியாத சாலையின் எதிரே ஓடினார். அப்போது அந்த வழியாக புதுச்சேரி நோக்கி வந்த பேருந்திற்குள் அவர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விறைந்து வந்த போலீசார் காதலன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தினா்.