வெளிநாட்டு பெண்ணுடன் காதல்.. கை கால்களை கட்டி சித்தரவதை செய்து கொன்று வீசிய நபர் - கொடூரக் கொலை!

Attempted Murder Delhi Switzerland
By Vinothini Oct 22, 2023 06:12 AM GMT
Report

இளம்பெண் ஒருவர் சித்தரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடூரக் கொலை

டெல்லியின் மேற்கே திலக் நகர் பகுதியில் இளம்பெண் ஒருவரின் உடல் கிடந்துள்ளது, இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீஸ் விசாரணையில், 30 வயதான அந்த பெண் சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. பின்னர், அந்த பெண்ணின் உடலில் தீயால் சுட்ட காயங்கள் காணப்பட்டன.

lover-brutaly-killed-his-foreign-gf-in-delhi

அவருடைய கண்கள் பிதுங்கி இருந்தது, இதனால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், அவரது உடலில் ஒற்றை ஆடையுடன், குட்டை கவுன் அணிந்தபடி இருந்தது.

அவருடைய கை, கால்கள் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு, பூட்டு போடப்பட்டு இருந்தன. உடலின் மேல்பகுதி ஒரு பெரிய, கருப்பு நிற பாலித்தீன் பையால் சுற்றப்பட்டு இருந்தது.

தகாத உறவில் கணவர்.. வேலைக்காரனுடன் மனைவி கூட்டு - பாம்பை வைத்து பரலோகம் அனுப்ப பிளான்!

தகாத உறவில் கணவர்.. வேலைக்காரனுடன் மனைவி கூட்டு - பாம்பை வைத்து பரலோகம் அனுப்ப பிளான்!

போலீஸ் விசாரணை

இந்நிலையில், போலீசார் விசாரணையில் சி.சி.டி.வி உதவியுடன் குர்பிரீத் என்ற நபரை கைது செய்தனர். பின்னர், 4 ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஊடக வலைதளம் ஒன்றின் வழியே அந்த பெண்ணுடன் குர்பிரீத்துக்கு அறிமுகமாகி அவரை காதலித்துள்ளார். அப்பொழுது அந்த பெண்ணிற்கு வேறு காதல் இருப்பது தெரியவந்தது, இது அவருக்கு பிடிக்கவில்லை. அவரை வெளிநாட்டில் இருந்து டெல்லிக்கு வரவழைத்துள்ளார்.

lover-brutaly-killed-his-foreign-gf-in-delhi

பிறகு, அவரை கைகள் மற்றும் கால்களை சங்கிலியால் கட்டி, அதன் பின்பு அவரை கழுத்து பகுதியை நெரித்து, மூச்சு திணற செய்து கொலை செய்துள்ளார். பிறகு இவர் மற்றொரு இளம்பெண்ணின் ஐ.டி.யை பயன்படுத்தி ஒரு காரை வாங்கி அந்த உடலை போட்டு வைத்துளார்,

பின்னர் நாற்றம் வந்ததும் அதனை வெளியே வீசிவிட்டு சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.