வெறும் 10 நிமிடங்கள் நின்றால் போதும்.. நீல நிறத்தில் மாறும் கால்கள், என்ன காரணம்? - ஆய்வில் அதிர்ச்சி!
கொரோனாவால் கால்கள் நீல நிறத்தில் மாறுவது குறித்து ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீண்ட நாள் கொரோனா
தி லான்செட் ஜர்னலில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தாது குறித்து கூறப்பட்டது. அதில் "இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் 33 வயது நபரின் கால்கள் நீல நிறமாக மாறியது குறித்து ஆய்வு செய்யபப்ட்டது. அவர் நின்று ஒரு நிமிடம் கழித்து, நோயாளியின் கால்கள் சிவந்து, சிறிது நேரத்தில் நீல நிறமாக மாறியது, நரம்புகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
10 நிமிடங்களுக்குப் பிறகு முற்றிலும் நீல நிறமாக மாறியது. நோயாளி தனது கால்களில் ஒரு கனமான, அரிப்பு உணர்வை விவரித்தார். அவர் நின்ற நிலையில் மாறி உட்கார்ந்த, இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு அவரது அசல் நிறத்திற்கு திரும்பியது" என்று குறிப்பிட்டிருந்தது.
கொரோனா பாதிப்பு
இதனை தொடர்ந்து, கொரோனவால் பாதிக்கப்பட்டதில் இருந்து தான் இவ்வாறு நீல நிறத்தில் மாறுவதாக கூறினார். மேலும், ரத்த அளவு குறைவது தொடர்பான (postural orthostatic tachycardia syndrome POTS) அறிகுறிகள் இருப்பதும் தெரியவந்தது.
இந்த நீண்ட நாள் கோவிட் இருந்தவர்களுக்கு நீல நிறத்தில் கால்கள் மாறும் acrocyanosis நிலை ஏற்படும். மேலும், இது நோயாளியின் தினசரி செயல்பாடுகள், இதயத்துடிப்பை அதிகரிப்பது, நரம்பு மண்டலம் பாதிப்பது, மற்றும் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படலாம் என்று கூறியுள்ளனர்.
பலர் இது போன்ற பிரச்சனைகள் இந்த நோயால் தான் நடக்கிறது என்று அறியமாட்டார்கள், இது குறித்த விழிப்புணர்வு வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் எச்சரித்துள்ளனர்.