பாதுகாப்பு கேட்ட ஜோடி; லிவ் இன் ரிலேஷன்சிப் ஒரு மோகம், டைம்பாஸ் - நீதிமன்றம் காட்டம்!
லிவ் இன் ரிலேஷன்சிப் உறவில் இருக்கும் ஜோடியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
லிவ் இன் ரிலேஷன்சிப்
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் 22 வயது இளைஞர். இவர 20 வயது இளம்பெண்ணுடன் லிவ் இன் ரிலேஷன்சிப்பில் உள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் புகாரளித்துள்ளனர்.
தொடர்ந்து, இளைஞர் மீது திருமணத்துக்கு வற்புறுத்தி பெண்ணை கடத்துதல் உள்ளிட்ட சில பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றம் கருத்து
இதனையடுத்து, அந்த ஜோடி தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ராகுல் சதுர்வேதி மற்றும் முகமட் அசார் ஹுசைன் இத்ரிசி, மனுதாரர் தரப்பு என்பது 20, 22 வயதில் உள்ளனர்.
வாழ்க்கை என்பது ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்ட படுக்கையல்ல. கடினமான காலங்களை கொண்டது. உண்மையை சொல்லப்போனால் ஒவ்வொரு தம்பதிகளும் கடினமான காலத்தை சந்திக்கின்றனர். இது எங்களின் அனுபவத்தின் மூலமாக கூறுகிறோம்.
ஆனால் லிவ் இன் ரிலேஷன்சிப் என்பது எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பு, மோகத்தினால் வந்திருக்கலாம். மேலும் லிவ் இன் ரிலேஷன்சிப் என்பது ஒரு டைம்பாஸ் போன்றதாக இருக்கிறது. அது கண்ணாடி போல் உடையக்கூடியது. இந்த உறவு என்பது நிலையற்ற ஒன்றாகும்'' எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.