இனி தட்கல் டிக்கெட் புக் பண்ணனுமா? அப்போ IRCTC கணக்குடன் இதை கண்டிப்பா செய்யனும்!
ஆதார் எண்ணை இணைக்கும் பணியை ஐஆர்சிடிசி தொடங்கியுள்ளது.
தட்கல் டிக்கெட்
ரயிலில் முன்பதிவு செய்த டிக்கெட்டை பெறுவதற்கு பொதுமக்கள் ஐஆர்சிடிசி இணையதள கணக்கைப் பயன்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் கோடிக் கணக்கிலான போலி ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்குளை ரயில்வே நிர்வாகம் நீக்கி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
தொடர்ந்து, ஆதார் ஓடிபி அடிப்படையில் மட்டுமே ஜூலை 1 முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்று இந்திய ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை ஐஆர்சிடிசி பணிகள் தொடங்கியுள்ளது. இதன் மூலம் டிக்கெட் முன்பதிவுகளில் ஏற்படும் முறைகேடுகள் முற்றிலுமாகத் தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.
முக்கிய கட்டுப்பாடு
ஐஆர்சிடிசி அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் யூசர் ஐடி, பாஸ்வேர்டு அளித்து ஐஆர்சிடிசி முன்பதிவு இணையதளத்துக்குள் செல்ல வேண்டும். அதில், மை அக்கவுண்ட் என்பதை கிளிக் செய்து, ஆத்தென்டிகேட் யூசர் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர், ஆதார் அட்டையில் உள்ளதைப் போல பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இதையடுத்து, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். அந்த ஓடிபியை கொடுத்தவுடன் ஐஆர்சிடிசி இணையதளத்துடன் ஆதார் இணைக்கப்படும்.
டிக்கெட் முன்பதிவில் முறைகேடுகள் நடைபெறுவதால் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.