அடுத்த போப் ஆண்டவரே நான் தான் - டிரம்ப் விருப்பம்
அடுத்த போப் ஆண்டவர் நான் தான் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அடுத்த போப்?
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக வாடிகனில் உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் ரோமில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், போப் பிரான்சிஸ் மறைவுக்குப் பிறகு புதிய போப்பை தேர்வு செய்வதற்கான கர்தினால்களின் மாநாடு தொடங்கவுள்ளது. உலகம் முழுவதும் 252 கர்தினால்கள் உள்ள நிலையில், போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான வாக்களிக்கும் தகுதி படைத்த 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 135 பேர் உள்ளனர்.
டிரம்ப் பதில்
அவர்கள் தங்களுக்குள்ளே இருந்து ஒருவரை புதிய போப் ஆக தேர்வு செய்வார்கள். இதில் ரோமில் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டார். அப்போது கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்து அவரிடம் கருத்து கேட்டதில்,
"நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன்; அதுதான் எனது முதல் தேர்வாக இருக்கும்" என்றார். மேலும், நியூயார்க் வெளியே இருக்கும் ஒரு கார்டினல் எங்களிடம் இருக்கிறார், அவர் மிகவும் நல்லவர், எனவே என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.