துண்டு பிரசுரம் இல்லைன்னா என்ன அதான் சின்னம் இருக்கே: பாமக வேட்பாளரின் விநோத பிரச்சாரம்
பூந்தமல்லி பாமக வேட்பாளர் துண்டு பிரசுரம் இல்லாததால் மாம்பழத்தை கொடுத்து வாக்கு சேகரித்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது. பூந்தமல்லி தனி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் ராஜமன்னார் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் நேற்று பூந்தமல்லி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள மசூதிகளில் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தனது கையில் துண்டுபிரசுரம் இல்லாததால் வேட்பாளரின் சின்னமான மாம்பழத்தை கையில் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பாமக சார்பில் வேட்பாளர் திடீரென்று அறிவிக்கப்பட்டதால் இதுவரை துண்டுபிரசுரங்கள் ஏதும் அச்சடிக்கவில்லை என கூறப்படுகிறது.
ஆனால் தனது புதிய திட்டத்தை செயல்படுத்திய ராஜமன்னார் கட்சியின் சின்னமான மாம்பழத்தை பிரச்சார வியூகமாக பய்னபடுத்தி வாக்கு சேகரித்தது ,அப் பகுதியில் பேசு பொருளாகியுள்ளது.