ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு - பாதையில் திடீர் மாற்றம் - ஏன்?

Queen Elizabeth II Death England
By Sumathi Sep 17, 2022 12:41 PM GMT
Report

ராணி எலிசபெத் உடல் அஞ்சலிக்காக எடுத்துச் செல்லும் பாதையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணி இரண்டாம் எலிசபெத் 

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் கடந்த 8-ந் தேதி காலமானார். 96 வயதான அவருக்கு ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் அவரது உயிர் பிரிந்தது. அவரது இறுதி சடங்கு வருகிற 19ஆம் தேதி லண்டனில் நடைபெற இருக்கிறது.

ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு -  பாதையில் திடீர் மாற்றம் - ஏன்? | Last Tribute To Queen Elizabeths Body

அவரது இறுதிச் சடங்கில் உலக தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர். லண்டனுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களைப் பாதுகாக்க, பிரிட்டிஷ் எம்ஐ5 மற்றும் எம்ஐ6 உளவுத்துறை நிறுவனங்கள், லண்டனின் பெருநகர காவல்துறை மற்றும் ரகசிய சேவை ஆகியவை இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 லண்டனில் ஊர்வலம்

சுமார் 7.5 லட்சம் பேர் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள உள்ளார். கடும் குளிரில், 16 மணி நேரம் காத்திருந்து மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு -  பாதையில் திடீர் மாற்றம் - ஏன்? | Last Tribute To Queen Elizabeths Body

வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்கு, ராணுவத்தினர் அணிவகுக்க அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உடன் வர ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது. லண்டனில் ஊர்வலம் செல்லும்போது, வீதிகளில் நின்று பொதுமக்கள் அதைப் பார்க்க முடியும்.

வின்ட்சர் கோட்டை

லண்டனில் அரச குடும்ப பூங்காக்களில், இந்த ஊர்வல நிகழ்ச்சி பெரிய திரையில் ஒளிபரப்பப்பட உள்ளது. அவரது சவப்பெட்டி, அரச குடும்பத்தின் கொடியால் சுற்றப்பட்டு அரச குடும்பத்தின் கிரீடம், சிலுவை ஏந்திய கோளச்சின்னம் மற்றும் செங்கோல், ராணியின் சவப்பெட்டி மீது வைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து விண்ட்சர் மாளிகைக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்படும். அதற்கு முன்னதாக விண்ட்சர் மாளிகையில் தற்போது ஒத்திகை பார்க்கப்படுகிறது. லண்டனில் ஹெடே பூங்கா முனையில் தேவாலயத்தில் இருந்து வெலிங்டன் ஆர்ச்சுக்கு ராணியின் சவப்பெட்டி இறுதி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும்.

வின்ட்சர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்கு ராணியின் சவப்பெட்டி கொண்டு செல்லப்படும். இந்நிலையில், இதில் பாதுகாப்பு கருதி சிறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.