26 ஆண்டுகள் தனியாக... அமேசான் காட்டின் கடைசி மனிதர் மரணம்!
சுமார் 26 ஆண்டுகளுக்கும் மேலாக அமேசான் காட்டில் தனியாக வாழ்ந்து வந்த பழங்குடியின கடைசி மனிதர் உயிரிழந்தார்.
அமேசான் காடு
பிரேசிலில் உள்ள ரோண்டோனியா பகுதியில் அமேசான் காட்டில் வாழ்ந்து வந்தவர்தான் Índio do Buraco அல்லது "பதுங்குகுழியின் பழங்குடி மனிதர்" என்று கூறப்படும் அந்த மனிதர். 1950-60 களில் பிறந்தவராக கருதப்படும் இவர்,
சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த அமேசான் காட்டில், கடந்த 26 வருடங்களுக்கும் மேலாக தன்னந்தனியாக வசித்து வந்தார். இவருடன் இருந்த மற்ற பழங்குடியின மக்கள், 1980-95 காலகட்டத்தில் காடுகளைச் சுற்றி இருந்த, அக்கம்பக்கத்து கிராம மக்களால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பழங்குடி மனிதர்
அச்சம்பாத்தில் இந்த பதுங்குகுழியின் பழங்குடி மனிதர் மட்டுமே தப்பித்துள்ளார். அவர் வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை, மேலும் தொடர்பை ஏற்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் அவர் முறியடிக்கவே செய்தார்.
அவர் வசிப்பிடத்திற்கு அருகில் ஏற்படுத்தியிருந்து பதுங்கு குழிகளிலிருந்து அம்புகளை எய்தி தாக்குதல் நடத்தி, யாரையும் வர விடாமல் தடுத்தார். 2018ம் ஆண்டு அவரைப் பற்றிய வீடியோ ஒன்றை தன்னார்வத் தொண்டு நிறுவனம் வெளியிட்டது.
ஆவணப்படம்
அதன் மூலமே இப்படி ஒரு மனிதன் இருப்பதாக தெரிய வந்தது. அந்த வீடியோ மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே, எடுக்கப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பிறகே வெளியிடப்பட்டதாக கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆவணப்படம் எடுப்பது உள்ளிட்ட செயல்களுக்காக யாரும் அவரை தொந்தரவு செய்யக்கூடாது என பிரேசில் அரசு கடுமையாக எச்சரித்திருந்தது. இந்நிலையில் கடந்த 23ம் தேதி,
பதுங்குகுழியில் சடலம்
அந்நபரின் உடல்நிலையைத் தெரிந்து கொள்ளும் நோக்கில் ஃபுனாய் என்ற அறக்கட்டளையைச் சேர்ந்த அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போதுதான் அவரது பதுங்குகுழியில் அவர் சடலமாகக் கிடப்பது தெரிய வந்தது.
அங்கு வன்முறை தடயங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால், அவர் இயற்கையாகவே இறந்திருக்கலாம் என கூறுகின்றனர். மேலும், தன் மரணத்தை முன்கூட்டியே அவர் அறிந்திருக்க வேண்டும். அதனால்தான் பறவையின் இறகுகளால் அந்த இடத்தை நிரப்பி இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளனர்.