ஏழுமலையானுக்கு 108 தங்கத்திலான புஷ்பம் - மிரளவைத்த லலிதா ஜுவல்லரி ஓனர்!

Tirumala
By Sumathi Sep 07, 2023 04:11 AM GMT
Report

 திருப்பதி ஏழுமலையானுக்கு 108 தங்க பூக்களை கிரண்குமார் காணிக்கையாக வழங்கினார்.

திருப்பதி

திருப்பதி ஏழுமலையானை தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இவர்கள் காணிக்கையாக மட்டுமே ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் செலுத்துகின்றனர்.

ஏழுமலையானுக்கு 108 தங்கத்திலான புஷ்பம் - மிரளவைத்த லலிதா ஜுவல்லரி ஓனர்! | Lalitha Jewellery Owner Gold Flowers To Tirupathi

அந்த வகையில் லலிதா ஜூவல்லரியின் உரிமையாளர் கிரண் குமார் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டார்.

தங்க புஷ்பம்

அப்போது சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 108 தங்க புஷ்பங்களை காணிக்கையாக வழங்கினார். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமையன்று, மூலவர் ஏழுமலையானுக்கு நடத்தப்படும்

ஏழுமலையானுக்கு 108 தங்கத்திலான புஷ்பம் - மிரளவைத்த லலிதா ஜுவல்லரி ஓனர்! | Lalitha Jewellery Owner Gold Flowers To Tirupathi

அஷ்டத்தலபாத பத்மாராதனை சேவையில் தங்க புஷ்பம் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக கிரண் ரெட்டி சுமார் 100 சவரன் தங்கத்தை மலர்களால் ஏழுமலையானுக்கு அர்ப்பணம் செய்துள்ளார்.