விஜய் சேதுபதியுடன் Selfie - ஒரு வாரமாக காணாமல் போன மூதாட்டி - சென்னையில் பரபரப்பு

Vijay Sethupathi Tamil nadu Chennai
By Karthick Apr 30, 2024 11:54 AM GMT
Report

கடந்த 19ஆம் தேதி தொடங்கி தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது.

திணறிய வாக்குச்சாவடி - சைலண்டாக வந்து ஜனநாயக கடமையை ஆற்றிய விஜய்

திணறிய வாக்குச்சாவடி - சைலண்டாக வந்து ஜனநாயக கடமையை ஆற்றிய விஜய்

தமிழகத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது, பிரபலங்களும், பொதுமக்களும் ஆர்வமாக வாக்களித்தனர். நடிகர் நடிகைகள் பலரும் தவறாமல் தங்களது கடமையை ஆற்றினார். தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய திரையுலகில் கவனம் பெற்றுள்ள நடிகர் விஜய் சேதுபதி வாக்குப்பதிவு மையத்தில் சக்கர நாற்காலியில் இருந்த மூதாட்டி ஒருவருடன் செல்பியும் எடுத்துக் கொண்டார்.

அப்புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்த சூழலில், விஜய் சேதுபதி செல்பி எடுத்துக்கொண்ட மூதாட்டி கடந்த 22ஆம் தேதி முதல் காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

lady goes missing selfie with vijay sethupathi

இது தொடர்பான சமூகவலைத்தள தகவலின் படி, எனது பாட்டி டாக்டர் கௌசல்யா மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகியோர் 22/04/2024 முதல் காணவில்லை. அவருடைய மகன் மனநலம் குன்றியவர். அவர்கள் இருவரும் கடந்த 22ஆம் தேதி வெளியே சென்றனர்.

அதன்பிறகு அவர்களை அணுக முடியவில்லை, Triplicane signal இருந்ததை மட்டுமே காவல்துறையால் கண்டுபிடிக்க முடிந்தது என்றும் தயவு செய்து இந்த ட்வீட்டை ஷேர் செய்து அவர்களை தேட உதவுங்கள் என விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.